Friday, February 13, 2009

காதலர் தின வாழ்த்துக்கள்...

மனிதக் காதலே செத்து போன இலங்கை தெரு நாட்டில காதலர் தின கொண்டாட்டத்துக்கு எங்க இழி தலைகள் வாழ்த்து சொன்ன எப்பிடியிருக்கும்?
ஒரு சின்ன கற்பனை.

நாட்டின் சாணியாதிபதி," எனதருமை தமிழ் சகோதரர்களே!!! எங்கள் நாட்டில நாங்கள் காதலர் தினம் கொண்டாடும் போது உங்களை மட்டும் வெளில கண்டபடி beachchu, கடே என்று திரிஞ்சால் கைது செய்வது உங்கள் மேல் உள்ள அபரிமித அக்கறையால் தான்., தமிழர்களாகிய உங்களின் மனதுக்கு ஏற்ற மாதிரி நீங்க உல்லாசமா வெளிக்கிட்டு போய் உங்கட பொன்னான கள்ளுத்(கல்லுத்) தோன்றி மண்ணுத் தோன்றா காலத்து கலாச்சாரத்தை மண்ணாக்கிடக் கூடாது என்று உங்கள் மேல் உள்ள அபரிமித அக்கறையால் தான். athaala நீங்க ரூம் போட்டே உங்க காதலரோடு நல்ல சந்தோசமா கொண்டாடுங்க...". மனதுக்குள் ரீங்காரம்.. ம்ம்ம் .. இப்படியே உங்க கலாச்சாரத்தை மண்ணாக்கிப் போட்டன் என்றால் அப்புறம் நீங்கள் என்ன அடையாளம் வைச்சிருக்கிறீங்கள் நீங்கள் தமிழன் என்று சொல்ல. கிக்கீகீ..கிக்கீ..

மாதிப்புக்குரிய டார்க்கிளாஸ் தாடியை தடவிக் கொண்டே "யாரவது இந்த புனித தினத்தை கொண்டாடாமல் விட்டால் அவர்கள் வி.பு ஆதரவு என்று சொல்லி இனம் தெரியாதவையாள மடக்கி பிடிக்கப் பட்டு திறந்த வெளியரங்கில் ஆர்ப்பாட்டமா இந்த தினத்தை கொண்டாட நிர்ப்பந்திக்கப் படுவினம்... எதுக்கும் வி.பு ஏதாவது குளறுபடி செய்ய நினைக்கும்.. மிகவும் கவனமா பக்தி சிரத்தையோடு நேரத்தை schdule பண்ணி எல்லா உறவுகளையும் கவனமா பாதுகாத்து கொள்ளுங்கோ.. ஒருத்தி இல்லை என்றால் மற்றாள் உதவுவினம் அவசரத் தேவைக்கு.. அரசியலில் கூட நான் இதைத் தான் simple டேக்கினிக்கா பயன்படுத்துறன்.."

அப்புறமா எங்கட ஆனந்தமான தலை சொல்லிச்சு "எல்லாத் தினங்களும் இல்லை இனங்களும் ஒரே மாதிரி தான் இந்த நாளைக் கொண்டாட வேணும் அப்ப தான் சமத்துவம் மலரும், அப்புறமா நான் சமஸ்டி தேவை இல்லை என்று சொன்னதுக்கு அர்த்தம் இருக்கும்.. வாழ்க தமிழ்... வாழ்க சமத்துவம்(கவனிக்கவும் சமஸ்டி என்று கவிழ கூட சொல்ல மாட்டன்)"....நான் ஒன்றும் எங்கள் ஆனந்தசங்கரி பற்றி சொல்லவில்லை.. அவர் ஒரு மூத்த தலைவர் பாருங்கோ....


வாழ்த்து தெரிவிக்க விரும்புறவை எல்லாம் வாழ்த்து தெரிவியுங்கப்பா...... எனக்கு நீங்க என்ன கமெண்டு பண்ணினாலும் பிரச்சனை இல்லை... ஏன் என்றால் தமிழக பெரும் முதலை இல்லை முதல்வர் மாதிரி எல்லாம் ரொம்ப சைலண்டா இருந்திடுவன் நீங்க எனக்கே ஆப்பு வைச்சீங்கள் என்றால்...

No comments:

Post a Comment