Tuesday, March 31, 2009

தங்கம் பற்றி - தங்கை ( காதலி ) எழுதியது...

ம்ம்... எதோ வெளில சொல்லாமல் பொத்தி பொத்தி வைச்சிருந்த கடிதத்தை சும்மா போடலாம் போல இருந்துது... காரணம் கடிதத்தின் உரிமையாளரும் , சந்தர்ப்பங்களும் அழிந்துவிட்டன... மேலும் இந்த தங்கம் என்ற பெயர் எனக்கு தந்த உறவு - என் உயிர் நண்பி- உண்மையில அவள் என் உடன் பிறவா தங்கை- (பழைய நினைவுகளில் - விடலைப் பருவம்) இப்ப மறு பிறப்பு எடுக்க தயாராயிருப்பார்... எல்லாம் யோசிச்சு தான் தங்கத்தை இப்ப என் நண்பன் சொல்லுமாப் போல கறுப்பு தங்கம் - பிளாட்டினம் - என்று மாத்தினான்... என்னை பற்றி ஒரு சின்ன நினைவூட்டல் உங்களுக்கு... இது எங்க எப்ப என்றெல்லாம் சொல்ல விரும்பல... ஆனால் அன்பின் ஆழத்தை உணர்த்தும் திருமுகம் என்றதால இங்க தாறன்...

என் உயிர் எனக்கு கடைசியாக எழுதியது முதல் பகுதி மட்டும் முகுதி தணிக்கை..
//
என் செல்லம்! தயவு செய்து முழுக்க வாசிக்கவும். இப்படி தான் தினமும் notes எழுத என்று எடுக்கிற papers எல்லாம் எதாவது உங்களைப் பற்றியே எழுதீட்டு, பிறகு யாரவது பார்த்திடுவினம் என்று கசக்கி எறியிரன். உங்களுக்கு சொல்ல நினைக்கிற கதை என்னோட நாளாந்த வாழ்க்கை, உங்களிடம் பகிர விரும்பிற என்னோட கடந்த காலம், தினம் தினம் நான் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், சந்தோசங்கள், கவலைகள், என்ன செய்தன், என்ன சாப்பிட்டன் என்றது முதல் எல்லாமே... எனக்கு நீங்கள் தான்....
நான் கோவத்தில உங்களோட கதைக்கிறதை எல்லாம் தயவு செய்து மனதில வைச்சுகொள்ள வேணாம். உங்களை விரும்பின மாதிரி எந்த ஒரு ஆணையும் நான் விரும்பினதில்லை- இனிமேல் என்னால விரும்பவும் முடியாது.
எத்தனையோ boysoda கதைச்சிருக்கன், கிட்ட இருந்து பழகியிருக்கன். அதில என்னை பிடிக்காமல் போனவர்கள் ஒன்று இரண்டு பேர் மட்டும் தான் . என்னை விரும்பியும் என் குணம் தெரிஞ்சு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று கேட்க நினைச்சும் கேக்காமலே இருக்கிற friends ஏயும் பார்த்திருக்கன். நான் எவ்வளவு சொல்லியும் கேக்காமல் என்றாவது நான் மாறலாம் என்று காத்திருக்கிற நண்பர்களும் எனக்கு தெரியும். அப்ப எல்லாம் என்னால அவங்களின் அன்பை புரிஞ்சு கொள்ள முடிஞ்சாலும் அதை ஏத்து கொள்ள முடிஞ்சதில்லை. எதோ பைத்தியக்காரங்கள் மாதிரி என்று நினைச்சிருக்கன்.
ஆனால் அந்த பாவமோ என்னமோ தெரியவில்லை, இப்ப நான் ஒரு பைத்தியம் மாதிரி தான் இருக்கன் - அதே காதலுக்காக. என்னால இப்ப எல்லாம் எதுவுமே சொந்தமா யோசிக்கவோ, செய்யவோ முடியிறதில்லை. முந்தி மாதிரி என்றால் நான் உண்மையில எத்தனையோ செய்தது முடிச்சிருப்பன். ஒரு நாலு நாளில செய்யக் கூடிய வேலையை இப்ப 2 மாதமா இழித்தடிச்சு கொண்டிருக்கன். எனக்கு தெரியுது நான் எதோ பிழையான வழில போறான் என்று. ஆனால் என்னால வேற வழில போக முடியல- போகவும் முடியாது.
ஆனாலும் நான் எல்லாத்தையும் நல்ல படிய செய்ய வேணும் என்று விரும்புறன். என் தங்கம் மட்டும் என்னோட இருந்தால் எனக்கு போதும்- என்னால எல்லாமே முடியும். முந்தி எல்லாம் நான் தனியவே எல்லாத்தையும் 100% செய்வன் என்ற நம்பிக்கை இருந்தது.
ஏனோ தெரியல எனக்கும் ஒரு வாழ்க்கை துணை தேவை என்று நான் நினைத்த நேரம் ஒரே ஒரு நிமிஷம் தான். எனக்காக உயிரையே தரக்கூடிய நண்பன் என்னை தன் உயிருக்கு நிகராக விரும்புறார் என்று தெரிஞ்ச பிறகும், அவரை விட ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்தால் அது என் மடைத்தனம். "உங்களை கலியாணம் கட்டி உங்களோட காலம் பூராவும் வாழ விரும்புறன்" என்று சொல்லிய அந்த கணமே, நான் என் எல்லா விசயத்திலும் என்னோடு பங்கெடுக்க இப்படி ஒருவரை என்னால தெரியவே முடியாது என்று எவ்வளவு சந்தோசப் பட்டன்.
இப்பவும், எப்பவும் என் தெரிவை நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறன், ஏனென்றால் என்னை விரும்பின எல்லாரும் எனக்காக எதையும் செய்ய தயாரா இருந்தவை என்பது உண்மை என்றாலும், என் தங்கம் எனக்காக உயிரையே குடுக்க தயாரா இருந்தவர். கூடவே பிறக்காத இடையில ஓட்டிடு பிரிஞ்சு போற ஒரு தங்கைச்சிகாக இப்படி இருக்கிற அண்ணனை யாரவது இழப்பாங்களா? பிரிவே இல்லாத உறவா அவர் கூடவே என் கடைசி கணம் வரை இருக்கோனும் என்று நான் எடுத்த முடிவு என்றைக்கும் பிழையானதாக இருக்க மாட்டுது.
ஆனாலும் ஏன் என் அண்ணா இப்ப எல்லாம் என்னை வெறுப்ப பார்க்கிறார் போல எனக்கு தோன்றுது? நான் அவரிட்ட எதிர் பார்க்கிற, அவர் தன் தங்கைக்கு காட்டிய அந்த பரிசுத்தமான அன்பு இப்ப மனைவியா, அவர் காதலியா எனக்கு கிடைக்கவில்லை என்று என் மனம் எதோ விசர் மாதிரி யோசிக்குது. எனக்கே புரியவில்லை. ஆனாலும் என் தங்கம் எனக்கு மட்டும் தான் என்றைக்கும். எப்பாவது எனக்கு கிடைக்க மாட்டார் என்று தெரியுதோ, அதுக்கு பிறகு நான் உயிர் வாழமாட்டன். அம்மா, அப்பா, அக்கா, தம்பி அதோட ஈழம், என் மக்கள், என் உறவுகள் என்று உணர்ச்சி பூர்வமா நான் கதைக்கும் போதெல்லாம், என் நண்பர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லை- நீ மாறிடுவாய்- என்று பல முறை சொல்லும் போதெல்லாம், எப்படி என்னால மாற முடியும் என்று வியந்திருக்கன். இப்ப எல்லாம் என் ஒவ்வொரு அணுவும் என் தங்கம் என்று மட்டும் சொல்லி துடிக்கிறதை பார்க்கிறான், அனுபவிக்கிறான். இப்ப நான் எப்படி இப்படி மாறினான் என்று வியக்கிறன்.
//

http://melbkamal.blogspot.com/2009/03/blog-post_22.html

எப்ப தான் நான் பொச்சு மட்டையாவன் என்று பாக்கிறீங்களோ.... டார்ச் மூடில இருக்கிறது பத்தாம் நூற்றாண்டுக்கு முதல்லே இந்து மா கடல்ல பறந்த எங்கட பாரம்பரியத்தின் சின்னம்...
டார்ச் மூடில இருக்கிறது = ஒரு இனம் = அவர் தம் பிரதிநிதிகள்.
அந்த சின்னத்தால் பிரதிநிதிகளையே விளிக்க பயன்படுத்திய அப்புக்குட்டி இன்னும் முழுமையான தெளிவில்லாமல், பாண்டியின் போக்கிலேயே இழுபடுை காணக் கூடியதா இருக்குது...
ஆனாலும் சின்னமும் அதன் பிரதிநிதிகளில் வழிகாட்டலும் இருக்கும் வரை என் இனமும் என் மொழியும் அழியப் போவதில்லை... ஒருவர் தான் தலைவராக மன்னனாக இருக்கலாம்... அனாலும் மந்திரிகளும் இளவரசர்களும் மீண்டும் மீண்டும் சிறந்த மன்னனை தெரிவு செய்யும் போது மக்களின் வாழ்க்கை வசந்தமாக இருக்க கூடிய கட்டமைப்பு அழிந்து போய்விடும் என்று கனவு காணுபவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.....
வெறும் ஒற்றை பற்றியில் இயங்கும் கட்டமைப்பு போல் கதைக்கும் பாண்டி எந்த ஒரு இலத்திரனியல் சாதனத்தையும் வடிவமைக்கும் போது எந்த வகையில் மூல வழங்கியில் இருந்து மின்சார இணைப்பு குடுப்பது என்பதை திட்டமிடவேண்டும்.. வெவ்வேறு மூல வழங்கிகளை பாவித்தால் அழுத்த சீராக்கம், சீரற்ற ஆடலோட்ட, நேரோட்ட நிலைமைகள் வரலாம்... அது தான் அவர் மூல வழங்கியை மாற்றீடு செய்வம் என்கிறார்... அதுக்கு முதல்ல யோசிக்கோணும் இந்த மூல வழங்கி பற்றியும் அதன் விரிவாக்கம் பற்றியும்... அதன் கட்டமைப்பிலேயே மாற்றீடு செய்வது எப்படி என்று திட்டமும் இருக்கு... நாயை குளிப்பாட்டி நாடு வீட்டில வைக்கலாமோ? பொறுத்திருங்கள்... ஆக்கப் பொறுத்திட்டு ஆறப் பொறுக்காமல் எப்படி ஹெமிஸ்ரி படிச்சீங்க???

ஆசுப்பத்திரி கட்டுறது என்று ஒவ்வொரு ஒவ்வொரு கல்லா பாத்து வைகிறாங்கள என்று பாக்க போக சொன்னாங்கள்.. ஒரு மாதத்தில திரும்பி வாறதுக்கிதேல்லை என்னை அடிச்சு பொச்சாக்கி ஆசுப்பத்திரிலையே போட்டுட்டாங்கள்...
பட்டம் பறந்த வானில் இலகு ரக வாகனம் பறந்தே கிலி மாறேல்லை... ( மீண்டும் இராவணனின் புஷ்பகம் அகள்வராச்சியிலா கண்டு பிடிச்சம்... எல்லாம் பொறியியல் மூளையும் தீர்க்கதரிசனமும் தான்...) . காலம் மாறும் போது பெறுமதியும் மாறி கண்ணோட்டமும் மாறி... தங்கம் ப்ளடினுமா மாறிச்சு... உங்கட கதை கேட்டு மன அழுத்ததில அணுக்கள் எல்லாம் நெருக்கமா மாறி கொதித்து ஆறியபோது தான் இந்த இரசாயன மாற்றம் நிகழ்ந்தது...

சத்தியமா உங்கள் ஒருவரையும் எனக்கு இதுவரை தெரியாது... இனிமேலும் தெரிய விரும்பலை... காலம் வரும் போது அறிமுகமாவோம் தமிழனாய்... சகோதரனாய்...

அப்பு குட்டி சுயமா யோசியுங்கோ.... குரைக்கிற நாய் கடிக்காது... செய்யிறதெல்லாம் சொல்லேலாது...செய்யப் போவன் என்றும் சொல்லேலாது செய்து காட்டும் மட்டும்.. but சிலவேளை சிலதை சொல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் மற்றவர்களுக்கு சொன்னா தான் விளங்கும்.. எல்லாராலும் மௌனத்தை புரிய முடியாது.... அது தான் நான் எல்லாம் ஆய்வு செய்யிறதில்லை... யாரவது செய்தா திருத்தி சொல்லுறன்... ஏனென்றால் சாதாரணமாக யோசிக்கதெரிஞ்ச்சவையை அவை பிழையா வழி நடத்தி.. அவர் தம் மனதை மாற்றி விடக்கூடாது என்று... அது தான் சிலவேளை புல்லட்டோடும் உணர்ச்சிவசப் பட்டுடுவன்... உண்மையையும் தீர்க்கதரிசனத்தையும் நியாயப் படுத்த நான் போதிய அறிவும் ஆதாரமும் தெரிஞ்சு வைச்சிருக்கன்.... அது தான் யாரவது பிழையான வழி நடத்தலுக்கு போகும் போது உணர்ச்சி வசப் படுறன்.... உங்கட அந்த நேர்காணல் ரொம்பவே பிழையான முடிவு... தயவு செய்து உதவாட்டிலும் ... உபத்திரவம் செய்யாதீங்க... டோர்ச் மூடி என் தெரிவு இல்லை... என் இனத்தின் தெரிவு...
in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and who is misleading them.. but the true is 2nd 40% is deciding the majority of an opinion..

Monday, March 30, 2009

ஏன் எனக்கு மட்டும் இந்த அவா?

எனக்கு வந்த ஒரு பின்னூட்டம்....
//
நீங்கள் இன்சினியரிங் படிச்சிட்டு தனிநாடு புளொக்ல கேக்கிறியள்.. வரலாறு தெரியாத நாயள்.. படிப்பை விட்டிட்டு நாடெண்டு போய் கைகால் சொத்தியாகி திரும்பி வந்து ாவழ வழிதெரியாம புளொக் எழுதுது..//

நான் என்ன நக்கித் தின்னவா பிறந்தேன் கடவுளே??? நாட்டை கட்டி எழுப்ப வேணும் என்று தான் தகைப்பு, இழுவை கணிச்சு சரிஞ்சு கொட்டுனாமல் கட்டுமானம் எப்படி உருவகிக்கிறது என்று பேப்பர் பேனை எடுத்து கணக்கு போட்டு பட்டம் வங்கி இருக்கன்... பேனைக்கு இருக்கிற வலிமை காணாது என்று தானே ஆயுதத்தை கையில எடுக்க வேணும் என்று அனுபவத்தில சொல்லுறன்... வாழ வழி தெரியாமல் தானே ப்ளோக்ல எழுதுறன்... நானும் ஆஸ்ற்றைலியாவிலயோ லண்டனிலையோ கனடாவிலையோ போய் நிண்டு துடிக்கேல்ல.. திரும்பி வர... இன்றேச்ட் என்னவா இருந்தாலும் என்னுடைய அறிமுகம் நான் இப்ப என்ன பண்ணுறன் என்று சொல்லுது தானே... என் இன்றேச்டை நேக்கி தான் என் பயணம் இருக்க வேணும் என்றில்லை... அனா அப்பிடி இருந்த வாழ்க்கை நன்னா இருக்குமுங்கோ... அது தான் சொன்னான்...

அப்பா நீங்க சொல்லுங்கோ... மானத்தோடையும், கை காலோடையும் எப்படி இருக்கிறது என்றதுக்கு நீங்களா நல்ல உதாரணம்?? என்ன தான் எனக்கு சொல்லுறீங்கள் புரியேல்லை ??

Friday, March 13, 2009

http://puligal.blogspot.com/2009_03_01_archive.html

http://puligal.blogspot.com/2009/03/defencelk-caught-with-more-fake.html#comment-form