Thursday, June 18, 2009

நெடு நாள் உண்மைகள் உறங்குவதில்லை.

நான் இப்போதெல்லாம் மற்றவர்கள் இணையங்களில் எழுதி பிரசுரிக்கும் கட்டுரைகளை படித்து குழம்புவதில்லை. காரணம், நான் செய்யவேண்டிய கடமை இப்போது மக்களுக்கு ஒரு கை சோறு குடுப்பது தான். ஆனால், சில எனக்கு சரி என்று பட்ட, இந்த புறம்போக்குகள் இன்றைக்கு விவாதிக்கின்ற தேவையற்ற விடயம் பற்றி, என் நண்பர்களுக்கு ஒரு தெளிவு தரவே இதை பதிவிலிடுகிறேன்.
எங்கள் தலைவன் எல்லாரையும் நம்புபவன் இல்லை, கடவுளுக்கு சமமாக நான் மதிக்கும் அவர் யாரையாவது நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், அதன் நம்பகத்தன்மையை நாங்கள் சந்தேகிக்க அருகதை அற்றவர்கள். அது மட்டும் அல்ல, சில விடயங்களில் உன்னிப்பாக எங்களுக்கு முழுமையான விளக்கம் மற்றவரால் தரப் படும் பொது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் அவர் மேற்கொண்ட முடிவுகளும், அவர் உலக தொடர்பாளருக்கு கொடுத்த பொறுப்புக்களும் அளப்பரியன. சில இடங்களில் தலைவரின் தூரதரிசன நோக்கை சந்தேகித்த சில தலைவர்கள் முன்னையவருடன் சேர்ந்து எடுத்த அவசர முடிவுகள் துயரமாய் முடிவடைந்தது ஏதோ உண்மை தான். அது நிற்க, ஆனாலும் தலைவரின் ஈழம் நோக்கிய நோக்கு என்றும் பொய்த்துப் போனதே இல்லை. தந்தை செல்வாவால் முன்மொழியப் பட்ட தமிழீழம், அதே காலத்தில் எங்கள் தலைவன் வழியில் தோன்றி வளர்ந்து ஒரு கொரில்லா + மரபு போராட்டத்தின் உச்ச வரம்பை அடைந்து நிற்கிறது. இனிமேல் அதே படை உலக அங்கீகாரத்துடன் மட்டுமே எங்கள் நாட்டுப் படை, அரசு என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை விரைவில் எதிர்கால அரசியல் முன்னகர்வுகளும், மீள் கட்டுமானத்துடன் சாவிலும் கூட சாதிக்கும் எங்கள் படை நடத்தும் சகோதரர்களும் நிரூபிப்பார்கள். தயவுசெய்து மாற்றீடு, வேறு என்ன வழி இருக்கு என்றெல்லாம் வீணே உங்கள் மூளையை குழப்பாமல், இதுவரை கட்டியணைத்திட்ட உங்கள் கரங்களை நீட்டியபடியே இருங்கள். உங்கள் ஆதரவு, உங்கள் ஒற்றுமை என்று பிரித்து சொல்லக் கூடாது, எங்கள் ஒற்றுமை தான் இப்ப இருக்கிற ஒரே பலம்.
மக்களோடு மக்களாய் சென்று வாருங்கள் என்றவர் தன்னால் முடிந்தவரை இப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறார், இனியும் செய்வார். காய் நகர்த்தல்களின் முடிவில் உண்மைகள் உறங்காது. ஆனால் வேறும் சின்ன மூளையை வைத்து கொண்டு இலைமறை காய்களை கண்டு பிடிக்க முடியாது என்று வெறும் பிதற்றல்களை தங்களின் எதிர்வுகூறல் என்று கூறும் வயதுக்கு வந்த சிறியோர் உணரவேண்டும், இல்லாவிட்டால் மாற்றோருக்கு உணர்த்தப் படும் காலம் வரும் வரை சற்றே பொறுமை வேண்டும்.

உங்கள் கரங்கள் எங்கள் கரங்கள் என்றும் மாதிரியே ஒலித்து கொண்டே இருக்க வேணும். அது தான் கனவுகளோடு உறங்கும் எங்கள் முப்பத்து ஐயாயிரம் புனிதர்களுக்கும், இரண்டு இலட்ச்சத்துக்கும் மேற்பட்ட அணைந்த அணைத்த கரங்களுக்கும் நாங்கள் செய்யும் மிகப் பொரும் கைம்மாறு.

தீர்க்க தரிசனம் எல்லாருக்கும் இல்லை. அது சில கடவுளரலேயே முடியும், அவர் தம் பிரதிநிதி கூட சில தவறு இழைக்கலாம், ஆனாலும் கொள்கையில் மாற்றமோ, இலக்கில் மறுவோ வரப் போவதில்லை. சில சிறு தவறுகள், அவசர முடிவுகள் தந்த பிரதிபலனையும் நமைக்கே மாற்றும் திறன், மற்றும் நீண்ட கால பார்வையில் இருக்கும் தெளிவும், பதற்றம் இல்லாத மிக முக்கியமான கொள்கை வெறியும் பணத்துக்கு அடிமைப் பட்டுவிடும் என்று பகல் கனவு காண்பது அபத்தம். சாதரண எல்லா மக்களாலும் முடியாத செயல்களை முடிந்தவரை கண்டு பிடித்து ஒப்படைத்த தலைவர், கடைசி வரை வெற்றி பாதையில் இருந்து விலகிவிட மாட்டார். பொறுத்திருங்கள், எங்கள் தனி நாடு நோக்கிய துயரப் பாதையில் இலக்கை அடையும் காலம் தான் எங்கள் உறுதி வைரமாகும் காலம், அது தான் இந்த காலம், நாங்கள் போலிகள் இல்லை, நிஜங்கள் என்பதை மனதில் இருத்தி, கூட இருந்து கரம் நீட்ட கூடிய எல்லை இது தான் என்று வரையறை இல்லா கடல் அலை போல எல்லை கடந்து நில்லுங்கள் எல்லாத் தேசத்திலும் இருந்து வந்து தென்றலாய் கலக்கும் தாயகத்து தோன்றல்களே!!!