Tuesday, May 19, 2009

யாரை பேய்க்காட்டுறான் மொக்கு சிங்களவன்?

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்

பொய் நாடகம் பற்றிய ஒரு அலசல்

மீண்டும் உங்கள் நினைவிற்கு ஒரு முந்தைய பதிவு:
http://thalaivy.blogspot.com/2009/04/blog-post_20.html

Friday, May 8, 2009

தென் இலங்கை தமிழ் மாணவர் அமைப்பு

வீரத்தமிழ்நாட்டு அன்னையே! எம் சோகங்களும் எமக்கான கொடுமைகளும் அடக்குமுறைகளும் உச்சக்கட்டத்தை அடைகையில் உன்னைத்தான் தஞ்சம் எனப் புகுகிறோம். ஏனெனில் எம் சகோதர உறவுகள் எங்கள் தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தானம்மா எங்களிற்காக கண்ணீரை மட்டுமல்ல உயிரைக்கூட விடுகிறார்கள்.
ஜயோ! எங்கள் உறவுகள் இரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கே அவர்கள் முள்ளிலும் கல்லிலும் தூங்குகிறார்கள். நாங்கள் வேதனைத்தீயில் வெந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பல்கலைக்கழகப்படிப்பிற்கு SriLanka தலைநகர்வந்து போக்கிடம் அற்று புலம்பித்திரிகிறோம். நாம் இங்கு எமது மொழியில்க்கூட பேச அனுமதி இல்லை. எமக்குத் தங்குமிட வசதிகளும் இல்லை. எம்மை கீழின விலங்குகள் என இழிவு படுத்துகிறார்கள். நாம் சிங்களக் காடயரால் (மாணவர்தான்) தாக்கப்படுகிறோம். எம்மை அடிக்கடி கைது செய்வது இராணுவ வதை முகாம்களிற்கு கொண்டு செல்வது அங்கே எம்மை எமது ஊரிற்குப் போகச் சொல்கிறார்கள். இது சிங்கள பௌத்த நாடாம் எம்மைத் தமிழ் நாட்டிற்குத் துரத்தப்போகிறார்களாம். இங்கு நாம் தமிழர் என்பதற்கான எந்த ஒரு அடயாளமும் இல்லாமல்த்தான் வாழ முடியும். வீதிக்கடைகளில் பொருள் வாங்கச் செல்ல முடியாது. அவர்கள் எம்மைத் தமிழர் என அடயாளம் கண்டால் எதுவும் நடக்கலாம். பயணம் செய்யும்போது சோதனைச்சாவடிகளில் எம்மைக் கைது செய்து சித்திரவதை செய்வார்கள், துப்புவார்கள். எமக்குத்தங்குமிட வசதியில்லை.

பல்கலைக்கழகத்திற்கு 30 Km ற்கு அப்பாலுள்ள தமிழர் வாழும் பகுதிகளில் இருந்துதான் பல்கலைக்கழகம் சென்று வருகிறோம். இங்கேதான் வெள்ளை வானின் கடத்தல் வேட்டை எம்மினத் துரோகிகளால் நடத்தப் படுகிறது. இங்கிருந்து தான் தமிழர் பலாத்காரமாக ஒரு நாளில் வெளியேற்றப்பட்டோம். சக வேற்றின மாணவனிற்க்குத் தேவையான வாழ்க்கைச்செலவிலும் அதிகம் நாம் கொடுக்கும் வாடகைப்பணம் மட்டும். அடிப்படை வசதிகள் அற்று அநாதைகளாகவே உள்ளோம் இங்கே.

பிஞ்சுக்குழந்தைகளின் எரி உடலங்களையும் பெண்களின் எரி உடலங்களையும் எமக்குக்காட்டி உங்களின் கதை முடிகிறது எனக்கூறி சிரிப்பார்கள். பார்க்கும்போது எப்படிக் கண்ணீரை அடக்குவது? நாவை அடக்கலாம். தாக்குவார்கள் எமது பெண்பிள்ளைகளைப் பார்த்து இவர்கள் இராணுவத்தினருடைய விருந்தாம். தமது பாதுகாப்புச் செயலாளர் சொன்னாராம் என்கிறார்கள்.
நாம் இங்கு எமது சொந்தப் பெருமை இழந்து சுருண்டு கிடக்கிறோம். வீரமிருந்தும் வெறியிருந்தும் நமது தாய் மண்ணிற்குப் போக முடியாது மூலைக்குள்ளே மூச்சுத்திணற முடங்கியிருக்கிறோம். உலகவாழ் தமிழர் அனைவரும் ஒன்று பட்டுப் போரிட்டு ஆரியர்- திராவிட யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வரும் இந்தப் புரட்சிக் காலத்தில் தமிழைக் கூடக் கதைக்காமல் பிணமாகத் திரிகிறோம். நாம் இங்கு பேசாமல் இறந்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் நாம் இறந்தால் சக மாணவரின் கதி சித்திரவதையால் எப்படி இருக்கும்?

பல்கலைக்கழக வளாகத்தில் பதாதைகள் தொங்குகின்றன, தமிழரின் குருதியால் Srilanka வினைத் துப்பரவு செய்யப் போகிறார்களாம். பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் போது எங்கள் நிலை எப்படி இருக்கும்? இங்கே சிங்களவரில் விரிவுரையாளர், மாணவர், காவலாளி என்று ஒரு பேதமுமில்லை, தமிழ் மாணவர் விடயத்தில். எம்மை இங்கு ஏளனம் செய்கிறார்கள்.
நாம் இங்கு பரீட்சைக் காலத்தில் கூட இரவு நேரங்களில் படிக்க முடியாது. அடையாளம் கண்டு வந்து தாக்குவார்கள். ஜயோ! நாம் செய்த பிழை ஒன்று தான். எம்மிலும் திறன் மிகுந்த மாணவர்கள் எல்லாம் கல்விச் செயற்பாடுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி களமாடச் சென்ற போது நாம் இங்கு பல்கலைக்கழகம் வந்ததுதான். இப்போது இந்தத் திறந்த வெளிச் சிறைச்சாலையை விட்டுப் போகவும் முடியாது. இங்கு உணர்வுகளை அடக்கியே அடங்கிப் போகின்றோம். ஊருலகம் அறியாமல் அடக்கமும் செய்யப்படுகின்றோம்.
ஜயோ! எங்களின் உறவுகள் எங்கு என்று கூடத் தெரியாது. இங்கே எமக்கு சிவப்பு நிறத்தில் புத்தகம் இருந்தால் கூட சிந்தனையெல்லாம் ஊரில் தான்.
ஜயோ! துப்பாக்கிகள் பேனாக்களை அடக்கி விடுகின்றன. இதை எழுதிக் கொண்டிக்கும் போது கூட நாம் கடத்தப்படலாம். உங்களால் தான் முடியும் எங்கள் பிரச்சனையை வெளியே சொல்ல. எங்களிற்கு நாட்டைத் தந்து காப்பாற்ற நாங்கள் உரிமையுடன் கேட்கும் ஒரே உறவுகள் நீங்கள் தானே! முத்துக்குமாரன் அண்ணாவினைப் பெற்றெடுத்த பூமியல்லா எமக்கு இருக்கிறது. இந்த ஒன்று தான் இன்று எமக்கு.

இங்ஙனம்,
மொழிச்செழியன்.
செயலாளர், தென் இலங்கை தமிழ் மாணவர் அமைப்பு. (Tamil Students' League of Southern-Lanka -TSL Southern-Lanka)

Wednesday, May 6, 2009

எங்கள் கருத்துக்களை இப்படியும் விதைத்தால் என்ன?

உலகமக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பினால் உலக அரசுகளும் அனைவருக்கும் தெரிந்த பகீரங்க உண்மை என்று விரைந்து கவனம் எடுக்கலாம் இல்லையா? IPL போட்டிகள் நடக்கும் மைதானங்களில் எங்களவர் ஒருசிலராவது சில இனப்படுகொலையை சித்தரிக்கும் ஆடைகள், கொடிகள் என்று வெளிக்காட்டலாம் தானே.... கொஞ்சம் ஆபத்தான வேலை தான், ஆனால் நியாயப் படுத்தலாம். அப்பிடியே தேர்தல் பிரச்சாரக் கூடங்கள், கண்காட்சிகள், நாளாந்த மக்கள் கூடும் சந்தைகள், ஞாயிறு சந்தை, கல்லூரிகள் என்று, மற்றவர் கவனத்தை ஈர்த்து, எங்கள் கருத்துக்களை விதைத்தால் என்ன? நான் போடும் t-shirt, நான் என்ன படம் வரைந்திருந்தால் தான் மற்றவருக்கு என்ன? ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் மட்டும் அணியும் அந்த ஆடைகளை பொது இடங்களுக்கும் அணிந்தால், சில நேர் விளைவுகள் கிடைக்கப் பெறலாம் தானே?