Wednesday, May 6, 2009

எங்கள் கருத்துக்களை இப்படியும் விதைத்தால் என்ன?

உலகமக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பினால் உலக அரசுகளும் அனைவருக்கும் தெரிந்த பகீரங்க உண்மை என்று விரைந்து கவனம் எடுக்கலாம் இல்லையா? IPL போட்டிகள் நடக்கும் மைதானங்களில் எங்களவர் ஒருசிலராவது சில இனப்படுகொலையை சித்தரிக்கும் ஆடைகள், கொடிகள் என்று வெளிக்காட்டலாம் தானே.... கொஞ்சம் ஆபத்தான வேலை தான், ஆனால் நியாயப் படுத்தலாம். அப்பிடியே தேர்தல் பிரச்சாரக் கூடங்கள், கண்காட்சிகள், நாளாந்த மக்கள் கூடும் சந்தைகள், ஞாயிறு சந்தை, கல்லூரிகள் என்று, மற்றவர் கவனத்தை ஈர்த்து, எங்கள் கருத்துக்களை விதைத்தால் என்ன? நான் போடும் t-shirt, நான் என்ன படம் வரைந்திருந்தால் தான் மற்றவருக்கு என்ன? ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் மட்டும் அணியும் அந்த ஆடைகளை பொது இடங்களுக்கும் அணிந்தால், சில நேர் விளைவுகள் கிடைக்கப் பெறலாம் தானே?

No comments:

Post a Comment