Tuesday, August 11, 2009

அடுத்தது என்ன?

இது என் டியாரி மாதிரி, எப்போதாவது இருந்திட்டு மாதம் மாதம் நினைவு வரும் போது, வலிக்கு விடை தேடி நான் தொடரும் பதிவுகளில் ஏதாவது புது வியாக்கியானம், இல்லை விளக்கம் இருக்கா என்று பாத்திட்டு போவன்.
http://kalaiy.blogspot.com/2009/08/blog-post_11.html தான் இந்த முறை ஆறுதலா இருந்துச்சு...
இப்ப வடக்கின் வசந்தத்தில் முக்கிய பங்கு ஆற்ற தானாவே கொண்டாந்து விட்டிருக்காங்கள். நான் யார் என்று தெரிஞ்சு விட்டிருக்கான்களோ, இல்லை தெரியாமலே விட்டிருக்கான்களோ... இப்ப திடீர் கடத்தலின் பின்னர் தான் குழம்பிப் போயி யோசிக்கிறன்.

ஒருகாலத்திலை எல்லார் கருத்தையும் மதிக்கிற நான், என்றைக்கு அண்ணா வழி தான் முடிவு என்று நினைத்தனே அன்னிலிருந்து எதுக்கும் யோசிக்கிறதில்லை, ஆனால் இன்றைக்கும் பலமா இருக்க முடியும் என்று உறுதி மொழி கிடைச்சும் நான் ஏதோ யோசிக்கிறன்... காரணம் அவருக்கே இப்படி காட்டிகொடுப்பு என்றால்? நான் எல்லாம் இவங்களுக்கு எம்மாத்திரம்...
நல்ல காலம், இப்ப என் மக்களோடு இருக்கிறது மட்டும் ஒரு ஆறுதல்... வெடித்து நின்மதி அடையும் பாக்கியமும் எனக்கு தரப்பட்டில்லை...

என்ன தான் இருந்தாலும் கனவுகளோடு கடைசி நிமிடமும் என்னையும் நினைத்து தான் விடை கொடுத்திருப்பாள் என் தங்கை... அவளின் கலையாத அதே கனவுகளுக்கு ஆயுதம் தாங்கியோ தாங்காமலோ விடை காணும் முடிவு மாறப் போவதில்லை - தங்கம் உன் மேல் சத்தியமாய் சொல்கிறேன்...

சும்மா புலம்போனும் போல இருந்துச்சு.. புலம்பி முடிச்சிட்டன்...
தன் கையே தனக்கு உதவி...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....
ஆனாலும் ஒரு சந்தோசம் இன்னும் புலத்திலை இல்லாத மன எழுச்சியை முகாங்களில் முடங்குப் பட்டு இருந்தாலும் காண்கிறேன்..
எத்தனையோ புத்திஜீவிகள் யுத்த கைதிகளாக நடத்தப் படாமல் ஈவிரக்கம் அற்று கொன்றழிக்கப் பட்டிருப்பினும், அவர்கள் தந்த இன்னுயிர் எங்களில் பலரை அவர் போல் வர வேண்டும் என்று தூண்டசெய்கிறது...
வெளியில் வருவோம் என்று தெரிந்திருந்தும் உண்மையுரைத்த மருத்துவர்கள் போல வரவேணும் என்று ஒரு பத்து வயது அப்பாவை இழந்திட்டு முகாமிலை இருந்து சொல்லுறதை கேட்டும் போது, மீண்டும் மீண்டும் விடுதலை தேடி போக உறுதி கிடைக்கிறது...
ஆனாலும் இப்போது நேரம் எங்களுக்கு சரியில்லை என்ற சின்னப் பிள்ளை கருத்தோடு உலாவருகிறேன்...
எரிமலை அடங்கினால், மீண்டும் உக்கிர வேகத்தோடு வெடிக்கும் காலம் வந்து தான் ஆகும்...
வெளிலை ஒருவர் மட்டும் இல்லை, இன்னும் பல பேர் இருக்கினம்.. ஆனால் எந்தளவுக்கு கை தருவினமோ தெரியேல்லை... எனக்கு சில மாதம் முன்னர் அறிவுரை தந்த பெரியாரை இப்ப காணவே முடியேல்லை... எழுத்துக்களுக்கும் பலம் இழந்து போச்சுதோ தெரியேல்லை... எழுதி கிழிக்கிறதுக்கு இப்ப ஒன்றும் இல்லை.. கன பேருக்கு வரலாறு தெரியும், ஆனால் புது வரலாறை நாங்கள் படைத்தால் தாங்கள் கைகட்டி பாப்பம், துஉற்ருவம் என்றதில்லை இருந்து என்றைக்கு மனமார மாறுகினமோ அன்றைக்கு தெற்கு நிலைகள் பத்தி எரியும்...
ஆனால் இன்னும் கொஞ்ச காலம் இருக்கு இந்த மனநிலை மாற்றத்துக்கு...

யாரவது இன்னும் உங்கள் உறவுகளை தேடித் பிடிக்க உதவி தேவைப் படின் தொடர்பு கொள்ளவும், அரச உதவியோடு தேடமுடியும்...