Saturday, February 28, 2009

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி?

http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e

http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e


/* ஆனால், 'பயங்கரவாத' இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.

அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?

அதற்கு இருக்கும் ஒரே வழி - ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்.

புலிகள் சரணடைந்தவுடன் - போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.

- இது தான் இன்றைய நிலை. */


உங்கள் தலைப்பை முதலில் மாற்றினால் அதுவே நீங்கள் வரலாற்றுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி.
எழுந்த மானமா இடைஇடையே வாசிக்கும் என் போன்றவர்கள் உங்கள் தலைப்பையும், நான் மேலே பிரித்தெடுத்த பந்தியையும் ஆழமா வாசித்து விட்டு இப்போது எந்த துணைக் குழுவோடு சேர்ந்துக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டோம்.
மக்களின் உயிர் தான் இப்ப காக்கப் படவேணும். அப்புறம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று மக்களை புலிகள் இல்லாமலே வாழ வைக்கலாம் என்ற எண்ணத்தை உங்கள் இந்த கட்டுரையின் சில பந்திகள் நீங்கள் விரும்பாமலேயே திணித்து விட்டன.

Monday, February 16, 2009

ஏன் எங்களால முடியாது?

http://www.puthinam.com/full.php?2b3TvPe0dxc2j0ecBH5m3b4TcE04d2c3l3cc2GpX3d43dSO3b036Qs3e

/ * போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம். *//* பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக */
ஏன் எல்லாரும் சேர்ந்து இலங்கைக்கு உதவுகினம்? இலங்கை அவர்களுக்கு என்ன செய்கிறது? தன் நாட்டில உள்ள சில வளங்களை அவர்களிடம் அடைமானம் வைக்கிறது... அவ்வளவு தான். அதே வளம் தமிழீழத்தில் இருந்தால் நாங்கள் அடைமானம் வைக்க மாட்டோம் என்பதால் தானே? ஏன் நாங்களும் இலங்கை செய்யுமாப் போலவே சில விட்டு கொடுப்புக்களை செய்யக் கூடாது? நாங்கள் பெரிய பெரிய வல்லரசுகளை எதிர்க்கிற அளவுக்கு ஒன்றும் பெரிய நிலப் பரப்போ ஆட்பலமோ அற்றவர்கள்.... சில வேளை இல்லை நிச்சயமாக நாங்கள் மூளை வளத்தில் எதிர் காலத்தில் வல்லரசுகளை மிஞ்சலாம் என்ற பயமும் அவர்களுக்கு காரணமாயிருக்கலாம். ஆனாலும் /* தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள் */ என்று நீங்கள் சொன்ன மாதிரி கேட்கும் போது நாங்கள் இலங்கை உங்களுக்கு இப்போது செய்யும் அல்லது தரும் அதே உதவியையும் ஒத்தாசையையும் தருவோம் என உறுதியளித்து சில விட்டு கொடுப்புக்களை செய்தால் என்ன?மொத்தமா தனியரசு என்று போகும் போது தான் நாங்க அடங்க மறுப்போம், தங்களை மிஞ்சிவிடுவோம் என்று யோசித்து அவற்றை செய்ய மாட்டாம் என்று சொல்லும் இலங்கை அரசோடு அவை ஒத்து ஊதுகின்றன... ஏன் நாங்கள் சில புதிய கொள்கைகளையும், விட்டு கொடுப்புக்கையும் செய்யக் கூடாது? /* சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.*/ எதற்காக செய்யினம் என்று தெரிந்தால் நாங்கள் இரகசியமா அதே நாட்டோடு பேச்சு வார்த்தை நடத்தி அதையே செய்வம் என்று ஒத்து சொன்னால் என்ன?
/*சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை. */ உதாரணங்களை சொல்லி நாங்கள் உண்மையாய் இருப்பம் என்று சொன்னால் ஒரு சில நாடாவது எங்களை ஏற்றுக் கொள்ளும் தானே? இலங்கையால முடியுது , ஏன் எங்களால முடியாது? எங்களை தடை செய்ய சொல்லி பெரும் பீரங்கியா இருந்த கதிர்காமர் ஒரு தமிழர் தானே? அவரின் அதே மூளை எங்களுக்கும் இருக்கு தானே? எல்லாம் சுயநலம் இல்லாமல் உதவுவினம் என்று எதிர் பார்க்க கூடாது இல்லையா?
எனக்கு வரலாறும் பெரிசா தெரியாது... உங்களை மாதிரி ஒரு அனுபவவும் இல்லை.. சும்மா யோசிக்க தோன்றிச்சு... யாரு தான் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் சும்மா நண்பனா இருப்பன் என்றதுக்காக உதவுவினம்?எங்கட தலை நகர்- திருமலை துறைமுகத்தை எங்கட கையில வைச்சு இருக்கோனும் என்று நினைச்சு கடைசியா இலங்கை அதை யாருக்கோ கொடுக்குது? ஏன் நாங்களே அதை இன்னும் கொஞ்சம் மலிவா நாணயமா குத்தகைக்கு தருவம், எங்களுக்கு நீங்க தனி நாடு அங்கீகாரம் தந்தால். அதோட இன்னும் சில திட்டங்கள் எங்கட நாட்டில இருந்து செய்யக் கூடியதாக பிளான் பண்ணி குடுப்பம். சர்வதேசத்தை brain wash பண்ணுவம்.கொஞ்சம் develope ஆனா பிறகு, குத்தகையை வேற party க்கு குடுப்பம்... நாங்களே முழுசையும் அனுபவிக்கோனும் அதுக்கு நீங்க உதவுங்க என்றால் யாரு தான் உதவுவினம்... இலங்கை சிங்களவரின் பச்சோந்தி தனத்தையும் எங்கள் இனத்தின் நாணயத்தையும் சொல்லி கொஞ்சம் விட்டு கொடுப்பம்... எனக்கு தெரியா இதெல்லாம் ஏற்கனவே செய்யினமோ இல்லையோ என்று... ஏன் போதறிவுக்கு எட்டின வரை தெரியேல்லை..நாங்கள் அமெரிக்காவுக்கு சொல்லுவம்... காணி உறுதி எங்களிட்ட தான் இருக்கு.. நீங்க இலங்கையிட்ட கேட்டு என்ன செய்ய விரும்புறீங்களோ அதையே உரிமை உள்ள எங்களிட்ட கேட்டு செய்யுங்கோ... ஒரு சில விசயங்களில் உங்களுக்கு நாங்கள் customer சில விசயங்களில நீங்க எங்களுக்கு customer. அவ்வளவு தான். அதுக்கு பிறகு எங்கட முதுகில என்ன சுமக்கிறது என்று நாங்க தான் முடிவு பண்ணுவம்... சில வேலை உங்களுக்கு தேவை என்றால் உங்களுக்காகவும் வேலை செய்வம்... அண்ணல் அடிமையா இல்லை.. நீங்கள் நியாயப் படி இப்ப எங்களுக்கு உதவுங்கோ... இலங்கையிட்ட எதிர் பார்கிறதை நாங்கள் உண்மையான நாணயத்தோட உரிமையோட தருவம் என்று சொன்னால் என்ன? ரொம்பத் தப்பா கதைக்கிறனோ தெரியேல்லை... என்ன செய்ய என்று நினைச்சிட்டால் வழியை இலகுவா கண்டுபிடிச்சிடலாம்...பாதைகள் மாறலாம், இலக்கு மாறாது... சில வளைவுகள் .. சில விட்டு கொடுப்புக்கள்... முழுவதையும் இழக்காமல்...வல்லவனுக்கு சொட்டு அடிபணியிறது... அவ்வளவு தான்.இவ்வண்ணம்,என் நாட்டுக்காக ஏதாவது செய்யத் துடிக்கும் ஒரு அறிவிலி...இது வரையும் எதுவும் செய்யாத ஒரு கோழை...எங்கள் ஈகப் பிரதிநிதிகளின் வரலாறு கூட இது வரை எனக்கு தெரிந்ததில்லை...இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னம் தான் ஏன் எங்கட பொடியலால எலேல்ல என்று சும்மா நினைச்சன்...எங்கயோ தப்பு பண்ணுறம்... ஏன் இலங்கை மட்டும் வெளி உலகுக்கு நட்பு, நாங்களும் தான் நட்பு என்று விட்டு கொடுத்தால் என்ன?சோழனின் விழ்ச்சிக்கு பின்னர் வந்த எங்கள் மன்னன் கட்டாயம் சோழனே மாதிரி இருக்காமல் இராய தந்திரங்களில இலங்கையின்ட முன்னால் வெளிவிவகார அமைச்சர் கதிகாமர் போல சிந்திச்சால் என்ன? (சோழனின் விழ்ச்சிக்கு உண்மைல என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. ஆனால் கடாரம்- அது எந்த நாடு இந்தோனேசியா (?) வை கூட கைப் பற்றி வைச்சிருந்தவர் என்று கேள்விப் பட்டு இருக்கன்.. அது அந்த காலம்.. தென் இந்தியா கூட எங்கட நிலப்பரபோடோ ஒப்பிடும் போது ஒரு பால் வீதி மாதிரி.. நாங்கள் போய் எப்பிடி தனி கோளாய் இருக்க நினைக்கிறது? வேணாம் வேற்று கிரகத்தாரையும் நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு- தேவை என்றால் இலவசமாவே- அனுமதிப்பமே? )நன்றி.....பிழை பொறுத்தருள்க...

please read the first article and give me some feedbacks.... i wanna learn why are we like this in the world? where we did the mistake? why our country became as a bloody country?
please anybody help me???
is the God true? God is not in the earth? then why r we choosing Kings as God in the earth?

Friday, February 13, 2009

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2328:2009-02-13-08-17-01&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

காதலர் தின வாழ்த்துக்கள்...

மனிதக் காதலே செத்து போன இலங்கை தெரு நாட்டில காதலர் தின கொண்டாட்டத்துக்கு எங்க இழி தலைகள் வாழ்த்து சொன்ன எப்பிடியிருக்கும்?
ஒரு சின்ன கற்பனை.

நாட்டின் சாணியாதிபதி," எனதருமை தமிழ் சகோதரர்களே!!! எங்கள் நாட்டில நாங்கள் காதலர் தினம் கொண்டாடும் போது உங்களை மட்டும் வெளில கண்டபடி beachchu, கடே என்று திரிஞ்சால் கைது செய்வது உங்கள் மேல் உள்ள அபரிமித அக்கறையால் தான்., தமிழர்களாகிய உங்களின் மனதுக்கு ஏற்ற மாதிரி நீங்க உல்லாசமா வெளிக்கிட்டு போய் உங்கட பொன்னான கள்ளுத்(கல்லுத்) தோன்றி மண்ணுத் தோன்றா காலத்து கலாச்சாரத்தை மண்ணாக்கிடக் கூடாது என்று உங்கள் மேல் உள்ள அபரிமித அக்கறையால் தான். athaala நீங்க ரூம் போட்டே உங்க காதலரோடு நல்ல சந்தோசமா கொண்டாடுங்க...". மனதுக்குள் ரீங்காரம்.. ம்ம்ம் .. இப்படியே உங்க கலாச்சாரத்தை மண்ணாக்கிப் போட்டன் என்றால் அப்புறம் நீங்கள் என்ன அடையாளம் வைச்சிருக்கிறீங்கள் நீங்கள் தமிழன் என்று சொல்ல. கிக்கீகீ..கிக்கீ..

மாதிப்புக்குரிய டார்க்கிளாஸ் தாடியை தடவிக் கொண்டே "யாரவது இந்த புனித தினத்தை கொண்டாடாமல் விட்டால் அவர்கள் வி.பு ஆதரவு என்று சொல்லி இனம் தெரியாதவையாள மடக்கி பிடிக்கப் பட்டு திறந்த வெளியரங்கில் ஆர்ப்பாட்டமா இந்த தினத்தை கொண்டாட நிர்ப்பந்திக்கப் படுவினம்... எதுக்கும் வி.பு ஏதாவது குளறுபடி செய்ய நினைக்கும்.. மிகவும் கவனமா பக்தி சிரத்தையோடு நேரத்தை schdule பண்ணி எல்லா உறவுகளையும் கவனமா பாதுகாத்து கொள்ளுங்கோ.. ஒருத்தி இல்லை என்றால் மற்றாள் உதவுவினம் அவசரத் தேவைக்கு.. அரசியலில் கூட நான் இதைத் தான் simple டேக்கினிக்கா பயன்படுத்துறன்.."

அப்புறமா எங்கட ஆனந்தமான தலை சொல்லிச்சு "எல்லாத் தினங்களும் இல்லை இனங்களும் ஒரே மாதிரி தான் இந்த நாளைக் கொண்டாட வேணும் அப்ப தான் சமத்துவம் மலரும், அப்புறமா நான் சமஸ்டி தேவை இல்லை என்று சொன்னதுக்கு அர்த்தம் இருக்கும்.. வாழ்க தமிழ்... வாழ்க சமத்துவம்(கவனிக்கவும் சமஸ்டி என்று கவிழ கூட சொல்ல மாட்டன்)"....நான் ஒன்றும் எங்கள் ஆனந்தசங்கரி பற்றி சொல்லவில்லை.. அவர் ஒரு மூத்த தலைவர் பாருங்கோ....


வாழ்த்து தெரிவிக்க விரும்புறவை எல்லாம் வாழ்த்து தெரிவியுங்கப்பா...... எனக்கு நீங்க என்ன கமெண்டு பண்ணினாலும் பிரச்சனை இல்லை... ஏன் என்றால் தமிழக பெரும் முதலை இல்லை முதல்வர் மாதிரி எல்லாம் ரொம்ப சைலண்டா இருந்திடுவன் நீங்க எனக்கே ஆப்பு வைச்சீங்கள் என்றால்...

Tuesday, February 3, 2009

சுதந்திரம் எங்கே?

Independence is the self-government of a nation, country, or state by its residents and population, or some portion thereof, generally exercising sovereignty.

Does Sri Lanka achieved this?

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஒரு சுதந்திர நாடா? விடை தேடிப் புறப்பட்ட பொது தான் வலிகள் தெரிந்தன... நாங்கள் கடந்து வந்த பாதைகளில் இருந்த கல்லு முள்ளுகளுடன் இன்று ஒரு பெரும் பாறாங்கல்லே - அயல் நாடு அன்பு கரம், ஆதரவுக் கரம் தரும் என்று நாம் நம்பி இருந்த பழமை வாய்ந்த தேசம் - தடையாய் வந்து நசுக்குகிறது இலங்கையின் சிறுபான்மையும், ஆதி குடிகளுமான என் மானத் தமிழினத்தை.

என்னவென்று சொல்லி புரிய வைப்பது, உண்மைத் தாற்பரியம் விளங்கியும் வறட்டு கொள்கைகளுக்காய் எங்களை விழுங்கி கொண்டிருக்கும் இந்த வட நாட்டவரையும் இத்தாலிக்காரியையும்...

காலம் பதில் தருமா இல்லை எங்கள் பெரும் தன்மையை தூக்கி எறிந்து விட்டு நாங்களே பதிலை தேடிக் கொள்வதா??