Friday, April 10, 2009

ஏன் எமக்கு மட்டும் இந்த நிலை? களத்தில் குதிக்க களத்தை நாமே அமைக்கலாம்

உலகத்தில உள்ள இனங்களில்ல நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணினம்? சில வேளை பத்தாம் நூற்றாண்டில், கடாரம் வென்ற பரம்பரைல எங்க தலைவர்கள் வேற இனங்களை அடக்கி ஆண்டு, அது இப்ப எங்க இனத்துக்கு நடக்குதோ? எப்படி தான் இருந்தால் என்ன வலிந்தவன் - பலமுள்ளவன் - வெல்வான் என்றது தலைவர் வாக்கு. அப்ப நாங்க என்ன இப்ப நலிந்தவராக மாறிட்டோமா என்று கேக்கிறதை விட, வலிமை சேர்க்க நான் எவ்வளவு உரம் போட்டிருக்கன் என்று கேளுங்கோ?

ஆயிரம் ஆயிரம் படை வரினும் அறமும் வீரமும் தோற்காது. ஆனால் அறமும் வீரமும் பதுங்கி இருந்தால், எதிரி பாய நினைப்பது வழமை தானே. செய்ய நினைத்தால், முடியாதது எதுவும் இல்லை.

காலத்தின் கட்டாயம் உங்களை சரியாக வழி நடத்துதா என்று ஒரு முறை சிந்தித்தால், மறுமுறை வழி தெரியும். போராட்டம் என்பது அரசியலையும் உள்ளடக்கியது தானே. உங்களால் ஒரு சிலருக்காவது, எங்கட போராட்டத்தின் நியாயங்களை எடுத்து சொல்லி முடிந்தால் அவர்களை புரிந்து கொள்ள வைத்தால் அதுவே பெரிய வெற்றி.
இன்றைக்கு உலகம் முழுவதுற்கும் தமிழ் ஈழம் என்ற ஒரு நிலப்பரப்பு ஈழத்தில இருக்கு, அது தன்னாட்சி உரிமை உடையதாய் இருக்க வேண்டும் என்ற நியாயம் விளங்க நாங்க சொல்லுறது தான் காரணம். ஒருத்தரும் தாங்களா எங்களை புரிந்து கொள்ள மாட்டினம். எங்களுக்கு உள்ளேயே சிலருக்கு, முன்னர் பலருக்கு இது புரியவில்லை. இப்ப என்னால முடிந்தது அந்த சிலரை திருத்துவது தான்.

எங்கையாவது ஒரு துரோகித் தமிழனை, எங்கட இந்த அபிலாசைகளை விட்டுடு நக்கித் தின்னும் சொற்ப ஆசைகளுக்காக அலைபவனை காண நேர்ந்தால், முதலில் அந்த துரோகியை மாற்றுங்கள், இல்லை அழியுங்கள். என்னால் எதுவுமே முடியாத நிலையில் இருந்து கொண்டு நான் இதை செய்யவில்லையா. கோவப் படமால் சக தமிழனுக்கு பிரச்சனையின் யதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனெனில் எல்லோருக்கும் சுயமா சிந்திக்க தெரியாது. தீர்க்கதரிசி ஒருவரின் கொள்கையை பிரதிபலிப்பதன் நயம் புரியவைத்தால் தான் புரியும். இந்த 30 வருசமா எங்கட தலைவரின் வழிநடத்தல் செய்த மற்றம் தான் உலகெங்கும் ஒலிக்கும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் என்ற முழக்கம். ஒரு சிலர் பகற்கனவு என்பது போல இன்னும் கதைக்க என்றே இருப்ப்பினம், அவர்களை முதல்ல கண்டு பிடிச்சு மாற்ற வேணும் இல்லை ஒழிக்க வேணும். இதையும் செய்து வென்றிட்டம் என்றால் எதிரி - துரோகியை விட - பலமிழந்தவன் தான்.

எதையும் வெளிப்படையா செய்ய முடியாத இடத்தில இருக்கிற நாங்கள் எப்ப பாதை திறப்பினம் என்று பார்க்கிற மக்களுக்கு, எங்கட உயிர் குடிக்கும் இராணுவ பேய்களின், தமிழ் துரோகியின் விமானத்தில் பறந்தாவது இலக்கை அடைய நினைக்கும் அப்பாவிகளை, நினைத்தால் நெஞ்சு பொறுக்காது தான்.
ஆனால் எங்களுக்கு எப்படி பட்ட தீர்வு வேணும் என்று வாக்கெடுப்பு நடந்தா இந்த அறிவிலிகளும், அற்ப ஆசை விரும்பிகளும் தான் முக்கிய பங்கு எடுப்பினம். அதல நாங்க இப்பவே அது பற்றி யோசிக்கோணும். இரகசிய இல்லை உள்விட்டுக்குள் பிரச்சாரம் ஒன்று கட்டாயம் தேவை.
உங்களால இயன்ற வரை இதையும் இப்பவே செய்தால், எப்பவும் நாங்கள் 99% ( எட்டப்பனை மாற்ற முடியாது தான், ஆனால் அவன் கூட்டாளிக்கு அவன் அற்ப தனத்தையும் எங்கள் தியகத்தனத்தியும் புரிய வைக்கலாம்) ஆதரவோடு ஜெயிச்சதா வரலாறு சொல்லும்.

2 comments:

  1. யாழ். தமிழ் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை

    இங்கு (யாழ்ப்பாணத்தில்) எதுவும் செய்யமுடியாமல், எதையும் கதைக்க முடியாமல் கைகட்டி, வாய்பொத்தி வாழ்கின்றோம்.

    இந்நிலையில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள் கண்டு நாங்கள் மெய்சிலிர்க்கின்றோம்.

    இங்கே யாரும் தமிழ் மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ, உண்ணாநிலைப் போராட்டங்களோ செய்யமுடியாது. அப்படிச்செய்தால் அடுத்த நாள் அவருக்கு வெள்ளை வான் கடத்தல் அல்லது கைது நடைபெற்று பின்பு அவரின் நிலை கவலைக்கிடமாகும், அப்படி நடந்தும் உள்ளது இதனை யாருமே கண்டிப்பதில்லை.

    யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தாலும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினராலும் அவ்வளவு அடக்குமுறை நிகழ்த்தப்படுகின்றது.

    இதில் எமக்காக நீங்கள் செய்யும் போராட்டங்கள்தான் எமது உள்ளத்தை கொஞ்சமாவது ஆறுதல்படுத்துகின்றது.

    எமது மக்கள் எவ்வளவு பேர் வன்னியில் இறந்தும், காயப்பட்டும் அனைத்துலக சமூகம் எமக்காக எதுவித இறுக்கமான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மீது பிரயோகிக்கவில்லை.

    எவ்வளவோ வல்லரசு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை இருந்தும் ஒரு சிறிய நாடாகிய சிறிலங்காவை இறுக்கமாக கண்டிக்க, எமக்காக கதைக்க, ஆறுதல் சொல்ல முன்வரவில்லை.

    ஆனால் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிநாடுகளில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எமது தேச விடுதலைக்காக போராட்டங்கள் செய்வது எமக்கு நிச்சயம் விடுதலை கிடைத்து தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

    புலம்பெயர் தமிழ் மக்களே எமக்கு விடுதலை கிடைக்கும் வரை உங்களது போராட்டங்களை தொடர்ந்து நடாத்த வேண்டும் என்று தமிழ் மாணவர் ஒன்றியமாகிய நாம் உங்களிடம் அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

    ReplyDelete
  2. எம் இரத்தங்களே... மிக்க நன்றி...
    நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்..
    தமிழ் ஈழம் - பிரித்து சொல்லும் போது தான் தமிழ் தெரியாதவர்களுக்கும், ஈழம் என்னும் நாட்டிலே தமிழ் என்ற இனம் வாழுது என்பது புரியும் என்பதால், நான் அப்படியே பாவிக்கிறன். இது ஒன்றும் பிரித்து பார்க்கும் பழக்கத்தால் இல்லை.

    ReplyDelete